மீன்வளத்துறை நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி: கிடைக்கப்பெறாதவர்கள் மீன்வளத்துறையை அணுகலாம்

திருப்பூர் மாவட்ட மீன்வளத்துறை உள்ளடக்கிய ஈரோடு மீன் துறை உதவி இயக்குநரின் செய்திக்குறிப்பு:


கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டபடி மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள கடல் மீனவர் மற்றும் உள்நாட்டு மீனவர்களுக்கு தலா 1000 வீதம் சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.


அதனைத் தொடர்ந்து ஈரோடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் 257 நலவாரிய உறுப்பினர்களின் விவரங்கள் மீன்துறை இயக்குநர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு மேற்கண்ட பயனாளிகளுக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது .


மேலும் நிவாரணத் தொகை கிடைக்கப்பெறாத எஞ்சிய உள்நாட்டு மீன்வர்களின்  சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற மேற்படி துறையை அனுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Previous Post Next Post