200 காவலர்களுக்கு முககவசம், சானிடைசர் மற்றும் டெட்டால் சோப்பு : ம.நீ.ம., சார்பில் ஜி.எல்.எம்.சிவக்குமார் வழங்கினார்

மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் காவல் துறை, தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த 200 காவலர்களுக்கு முககவசம், சானிடைஸ்சர் மற்றும் டெட்டால் சோப்பு ஆகியவற்றை மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் மய்யத்தினர் வழங்கினர் 



இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ் மாவட்ட நற்பணி இயக்கம் அணி செயலாளர் ஜி ஆர் பி கார்த்திகேயன் மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ் கோபி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பு என் கே சக்தி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Previous Post Next Post