தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இளஞ்சிறார் 2 பேர் உட்பட 4 பேர் கைது - 32 பவுன் தங்க நகை மீட்பு.!*


சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளஞ்சிறார் 2 பேர் உட்பட 4 பேர் கைது -சுமார் ரூபாய். 6 லட்சம் மதிப்புள்ள 32 பவுன் தங்க நகைகள் மீட்பு - கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

கடந்த 27.01.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான சோரீஸ்புரம், நியூ சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சுப்பரமணியன் (51) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடிச் சென்றதாகவும்,

மேலும் 11.02.2021 அன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் என்பவரது மனைவி அம்சவள்ளி (36) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகள் திருடிச் சென்றதாகவும்,

அதேபோன்று கடந்த 08.08.2021 அன்று தூத்துக்குடி கே.டி.சி நகர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சுதானந்தம் (61) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றதாகவும்,

திருடுபோன நகைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர்  சண்முகம் தலைமையில் 

உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், முதல் நிலைக் காவலர் பாலகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் கலைவாணர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தும் துப்பு துலக்கியும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி இந்திராநகரைச் சேர்ந்த சுப்புக்கனி மகன் மாரிச்செல்வம் (19), 

கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் முனீஸ்துரை (21) மற்றும் 2 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேரும் மேற்படி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து 16.10.2021 அன்று மேற்படி தனிப்படையினர் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எதிரிகள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூபாய். 6 லட்சம் மதிப்புள்ள 32 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு எங்கெங்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து, தங்க நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  பாராட்டினார்.

Previous Post Next Post