திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதும், அவர்கள் உடமைகள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருப்பாளர் நம்பிராஜ்பாண்டியன் தலைமை வகித்தார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் காளிமுத்து, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருந்ததிசந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கண்ணரசு, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட நிதி செயலாளர் பிரபாகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் முத்துராஜ், விளதை ஒன்றிய செயலாளர் முனியான்டி, புதூர் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.