டெல்லியில் நேதாஜி சிலை -பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

தேசத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் என பிரதமர் மோடி பேச்சு.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் பிரதிபலிக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நேதாஜியின் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட உள்ளது


அவரை கவுரவிக்கும் விதமாக, டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். அப்போது உள்துறை மந்திரி அமித்ஷாவும் உடனிருந்தார்.

கருங்கல்லால் ஆன நேதாஜியின் முழுஉருவ சிலை நிறுவப்படும் வரை ஹோலோகிராம் ஒளிச்சிலை காட்சியளிக்கும்


Ahamed

Senior Journalist

Previous Post Next Post