எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்


கோவில்பட்டி அருகே பாரதியார் இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் பாரதியார் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்திற்கு வருகை தந்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் எல். முருகன் பாரதியார் பிறந்த இல்லத்திற்கு சென்று மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


அதனைத் தொடர்ந்து இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதி வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் அவரது புத்தகங்கள் கையெழுத்துக்கள் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளும் கேட்டறிந்தார்

பின்னர் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டில் தேசியக்கொடி ஏந்தி மரியாதை செலுத்த வேண்டும் என்று பாரதப் பிரதமர் வலியுறுத்தியதை 


அடுத்தும் எட்டையாபுரம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்று பாரதியார் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது பின்னர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post