தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் - கனிமொழி எம்பி துவக்கி வைக்கிறார்.!

 

தூத்துக்குடி, இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமம் சென்னை வடபழனி போர்டிஸ் மருத்துவமனை நடத்தும் பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் 10ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. 

சிறப்பு மருத்துவ முகாமில்  போர்டிஸ் மருத்துவமனை இயக்குநர் வெங்கட பணிதர் நெல்லூரி வரவேற்புரையாற்றுகிறார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

மருத்துவ முகாமை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், சுகாதார துறை துணை  இயக்குநர்கள் பொற்செல்வன், பாஸ்கோ ராஜா உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த மருத்துவர்கள் தொழிற்நுட்பத்துடன் பங்கு பெறுகின்றனர். 

சிறப்பு மருத்துவர்களாக இருதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், இருதய அறுவைசிகிச்சை, எலும்பியல் நோய், வலி மருத்துவம், பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, வயிற்று ஸ்கேன், போன் டென்சிட்டி, பிப்ரோ ஸ்கேன் உள்ளிட்டவைகளும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்படும். 

ஏற்கனவே மருத்துவம் பார்த்து வரும் நோயாளிகள் பழைய ரிப்போர்ட்டுகளை கொண்டு வர வேண்டும். இருதய செயல் இழப்பு கொண்ட நோயாளிகள் இருதய மாற்று அறுவைசிகிச்சைக்கு சிறப்பு ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். 

இருதய பை-பாஸ், இருதய வால்வு மாற்றுதல், இருதய மாற்று அறுவை சிகிச்சை, இருதய ஸ்டென்ட் வைத்தல் போன்றவை தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலம் செய்து கொள்ளலாம். 

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் அய்யனார் பெருமாள் (9688086641) என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post