சென்னையில் கிறிஸ்துமஸ் விழா - எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து .!

 

தூத்துக்குடி மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை அதிமுக சார்பில் விமர்சையாக சென்னையில் நடத்தி சிறுபான்மையினர் கலந்து கொள்ளும் பெருவிழாவாக நடத்துவார். அவர் மறைவிற்கு பின்பு முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். 

அதே போல் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறவதையொட்டி அதிமுக சார்பில் வரும் 19ம் தேதி சென்னையில் வானகரம் ஜுசஸ்கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதனையொட்டி முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன், அதிமுக அமைப்பு செயலாளரும் திருவள்ளுர் மத்திய மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், தேர்தல் பிரிவு துணைச்செயலாளரும் அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான முன்னாள் எம்.எல்.ஏ இன்பத்துரை, தமிழ்நாடு முன்னாள் சிறுபான்மை ஆணையத்தலைவர் மகேந்திரன், ஆகியோர் சென்னை பசுமை சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post