நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி, பிப்.4ல், புளியம்பட்டியில் இந்து முன்னணி தலைமையில் ஆர்ப்பாட்டம். இந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு..

புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் இந்து முன்னணி சார்பில், இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு, இந்து முன்னணியின்,மாநிலதலைவர்காடே ஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில்,தென் பாரத அமைப்பாளர்,க.பக்தன்,மாநில பொது செயலாளர் ஜெ.எஸ். கிஷோர் குமார், மாநிலச் செயலாளர் செந்தில் குமார், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் மற்றும் மாநில அமைப்பாளர் ச.ராஜே ஸ் ஆகியோர் மாநாட்டு உரை நிகழ்த் தினர். நிறைவாக, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மாநாட்டு, நிறைவுரையாற்றினார். 

மாநாட்டில், விநாயகர் சதுர்த்தி விழா வில்பேசிய, இந்துமுன்னணி நிர்வாகி கள் மீது, பொய் வழக்குபோட்ட,தமிழக அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது எனவும்,நீர்நிலை ஆக் கிரமிப்பு களை தமிழக அரசு உடனடி யாக அகற்ற வேண்டும். இந்துக்கள் ஒன்றுபட்டு, வாக்களிக்க வேண்டும் என்பன உட்பட.பல்வேறு தீர்மானங் கள் நிறை வேற்றப்பட்டன.தொடர்ந்து தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி யம் பேசும் போது, 

பல்லடம் பகுதியில் செய்தியாளர் தன க்கு,சமூகவிரோதிகளால்அச்சுறுத்தல் உள்ளது என காவல் அதிகாரிகளிடம் தெரிவித்தும், போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்காமல் மெத்தனமாக இருந்ததால், அவர் மீது சமூக விரோதி கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி, இன்று அவர் உயிரு க்கு போராடி வரு கிறார்.செய்தியாளர்தாக்குதலை நாங் கள் வன்மை யாக கண்டிக்கிறோம் என்றும் ,மாநாட்டுக்காக, நடப்பட்ட கொடி கம்பங்கள், பேனர்கள் போலீசா ரால் அகற்றப்பட்டுள்ளன.தி.மு.க.வின் பேச்சை  கேட்டு,போலீசார்  நடந்து கொண்டால் 2026-ம் ஆண்டு இந்த ஆட்சி காணாமல் போய்விடும். தமிழ கத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட் டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக் க வேண்டும் என்றும். புளியம்பட்டி ஜல்லி குட்டையில். நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், அதற்காக வரும் 4ம் தேதி புளியம் பட்டியில், இந்து முன் னணி தலைமையில், விவசாயிகளை திரட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.



Previous Post Next Post