தூத்துக்குடியில் 73 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

தூத்துக்குடியில் 73 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

 தூத்துக்குடியில் நடந்த 73 ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்,

 

அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையாட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது விழாவில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காலை 9.02 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பால கோபாலன்,  மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 9.04 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார், பின்னர் புறாக்கள், பலூன்களை பறக்க விட்ட அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

 

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத்,

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலெட்சுமி , ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த்,  கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் அன்ன பாலா , கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இராமலெட்சுமி, ஆழ்வார் திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் பத்மகுமாரி உள்ளிட்ட போலீசார் 35 பேருக்கு பாராட்டுசான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக  பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கினார்.விழாவில் ரூபாய் 1,98,54,326/- மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நலத் திட்ட மதிப்பு ஒரு லட்சத்து 49 ஆயிரம்மும், வருவாய்த்துறை முதியோர் உதவி தொகை திட்டம் மூலம் பத்தாயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவியும் கூட்டுறவுத்துறை திட்ட மதிப்பு 46 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவியும்,வேளாண்மைத்துறை மூலம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 894 மதிப்புள்ள நலத்திட்ட உதவியும் ,மாவட்ட ஆதிதிராவிட நலத் திட்டம் மூலம் 13 ஆயிரம்  மதிப்புள்ள  நலத்திட்ட உதவிகளையும்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் 14 ஆயிரத்து 99 மதிப்புள்ள நலத்திட்ட உதவியும், மாவட்ட தொழில் மையம் மூலம் திட்ட மதிப்பு 5 லட்சத்து 98 ஆயிரம் நலத்திட்ட உதவியும். திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் ஒரு கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம், மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் , மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 333 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் , மொத்தம் 340 பேர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி, தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர்கள் (சி .வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்) தூத்துக்குடி, மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எட்டையாபுரம், காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மேல்நிலைப்பள்ளி திருச்செந்தூர் தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாயர்புரம், ஆகிய 6 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பார்வையாளர்களாக காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி, சி எம் மேல்நிலைப்பள்ளி ரங்கநாதபுரம் தூத்துக்குடி, புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி, சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ,சக்தி வித்தியாலயம் தூத்துக்குடி, சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஆகிய பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர் விழாவில் சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் தனபதி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, திருச்செந்தூர் DSP பாரத், தூத்துக்குடி DSP பிரகாஷ், ரூரல் DSP முத்தமிழ்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தியாகராஜன் (பொது), பாலசுப்பிரமணியன் (வேளாண்மை), பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி),   உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post