ரெட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு விழா

ரெட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு விழா.

 


 

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா ரெட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக  தனலட்சுமி பரமசிவம் பொதுமக்களின் ஆதரவு பெற்று  தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதவி ஏற்பு விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில்  தேர்தல்  உதவி அலுவலர் செந்தில்நாதன்  கலந்துகொண்டு  தலைவர் தனலட்சுமி பரமசிவம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். பின்னர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் வழங்கியும் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலர் மோகன் சரவணகுமார், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Previous Post Next Post