வெள்ளாளபாளையம் ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு உணவு பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  வெள்ளாளபாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



இதன் தொடர்ச்சியாக  தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு,  அரிசி,மளிகை பொருட்கள்,  காய்கறிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு  முக கவசம், கபசுர சூரணம்,  போன்றவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார். மேலும் ஊராட்சி முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


இதில் கோட்டாசியர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியபாமா வேலுமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் திலகவதி வாசுதேவன், ரேவதி நாகராஜன், ஊராட்சி செயலர் நாகமணி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்


Previous Post Next Post