நாங்குநேரி வானமாமலை மடத்தின் சார்பாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 3 லட்சம் 




நாங்குநேரி வானமாமலை மடத்தின் சார்பாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 3 லட்சம் 

நயினார் நாகேந்திரனிடம் ஜீயர் வழங்கினார்

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் மடத்தின் மடாதிபதி கொரோனா நிவாரண நிதியாக 3 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நாங்குநேரி பெருமாள் கோயிலின் மடத்தின் 31வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சாமி பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 3 லட்சம்  வரைவோலையாக  பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வழங்கினார். அவர் ஐ. ஓ. பி., வங்கி மூலமாக பிரதமர் நிவாரண நிதிக்கு அதனை அனுப்பி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து மடத்தின் சார்பாக நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு தலா 10 கிலோ அரிசி முக கவசம் கிருமி நாசினி மருந்து ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனை பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

 

 இதில் நாங்குநேரி டவுன் பஞ் செயலர் நம்பி, மடத்தின் மேனேஜர் தெய்வநாயகம் மற்றும் மடத்தின் ஊழியர்களுக்கும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திசையன்விளையை சேர்ந்த சுதா செய்திருந்தார்.

 

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்குவதற்கு வசதியாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்  கொக்கிரகுளத்தில்  உள்ள தனக்குச் சொந்தமான 15 அறைகள் கொண்ட தங்கும் விடுதியில் கட்டணம் இல்லாமல் அவர்கள் தங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 



 

Previous Post Next Post