சேலத்தில் அ.தி.மு.க பொன்விழா கொண்டாட்டம்- தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை



எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் கட்சியின் பொன் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவ சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடாஜலம் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கேக் வெட்டி தொண்டர்கள் பொதுமக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜு,நடேசன், சக்திவேல், ரவிச்சந்திரன், பொருளாளர் பங்க் வெங்கடாசலம்,பகுதி செயலாளர்கள் சரவணன், சண்முகம், யாதவ மூர்த்தி, பாலு, பாண்டியன்,ஜெகதீஷ் குமார்,முருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன் மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜேந்திரன்,ஜான் கென்னடி,கே.சி. செல்வராஜ்,சதீஷ்குமார், சுந்தரபாண்டியன்,பாமா கண்ணன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post