சோனியாகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

 

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் வ.உ.சி தமிழ் சாலையில் தபசு மண்டலம் அருகில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது

அதனை தொடர்ந்து ஆரோக்கியபுரத்தில் உள்ள தொழுநோய் மருத்துவ மனையில் உள்ளவர்களுக்கு மதிய உணவினை மாவட்ட தலைவர் சி.எஸ் முரளிதரன் வழங்கினார்


இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ் MC,மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், செந்தூர் பாண்டி, மாவட்ட துண தலைவர்கள் விஜயராஜ், அருணாசலம், பிரபாகரன், ஜெபராஜ்,சின்னகாளை, மாவட்ட பொதுசெயலாளர் மைக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயகிங்ஸ்டன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் , மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர்,வார்டு தலைவர்கள் மகாலிங்கம், தனுஷ், விஸ்வநாதன், முத்துவேல்,முனியசாமி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post