காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.!


கர்நாடகா மாநிலம் உடுப்பியில் 1941-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிறந்தவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ். 1972-ம் ஆண்டு உடுப்பி மாநகராட்சி கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 

1980-ம் ஆண்டு உடுப்பி மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வானார்.இதையடுத்து, 1984,1989,1991, 1996 என லோக்சபா தேர்தல்களிலும் உடுப்பியில் போட்டியிட்டு வென்றார்.

உடுப்பியில் மொத்தம் 5 முறை ஒரே தொகுதியில் வென்று எம்.பி.யானவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ். 2004-2009 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். 

சோனியா காந்தி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமான இவர், நேரு குடும்பத்தால் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Previous Post Next Post