விவசாய தோட்டத்துக்குள் தென்னை மரங்களை சேதம் செய்த யானைகள் - விவசாயிகள் கவலை.


தாளவாடி,ஜன.22:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகதுக்கு உட்பட்டது ஜீரகள்ளி வனச்சரகம். இந்த வனச்சரகதுக்கு உட்பட்ட எரனஹள்ளி சேர்ந்தவர் சுப்பிரமணி(60). இவர் தன்னுடைய தோட்டத்தில் தென்னை மற்றும் வாழை விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று  வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பிரசன்னாவின் தோட்டத்துக்குள் புகுந்து தென்னை மரங்களை  சேதம் செய்தது.

இதனை கண்ட  விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்றனர்.ஆனால் யானை அங்கேயே சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேல் முகாமிட்டு தென்னை,வாழை மரங்களை சேதம் செய்தன.இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது"

யானைகள் கடந்த சில மாதங்களாக  தொடர்ச்சியாக விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களையும்,மின் மோட்டார் குழாய்களையும்,கம்பி வேலிகளையும் சேதம் செய்து வருகிறது.எனவே காட்டுயானைகள் விவசாய தோட்டத்துக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி ஆழமான அகழி அமைக்க  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous Post Next Post